நீர் தேக்கத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தபெதிக-வினர் மனு

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகே உள்ள நீர்த்தேக்கக் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில் கட்ட முயற்சிப்பதாக இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக, அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை-சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே அமைந்துள்ளது வண்ணன் குட்டை. இந்த குட்டை கடந்த 80 ஆண்டுகாலமாக அப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. சமீபகாலமாக கோவையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வண்ணன் குட்டையை ஆக்கிரமித்து சிலர் கோவில்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என்று உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது. அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சிலர் கோவில்கட்டும் பணியை நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். தொடர்ந்து, இந்த பணிகள் நடைபெற்றால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...