கோத்தகிரி அருகே டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தவிட்டுமேடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தவிட்டுமேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்ட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தண்ணீர், சாலை, கழிப்பிட வசதி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக திறந்த வெளியில் மலம் கழித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது குறித்து அரசுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது நாள் வரையில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில், தவிட்டுமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் திடீரென டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் அருகாமையில் பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்ளது. இதனால், டாஸ்மாக் மதுபானக் கடையினை உடனடியாக அகற்றி, அந்த கடையின் கட்டிடத்தை கழிப்பறையாக மாற்றி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...