அதிமுக-வின் மூன்று குழுவினரும் பாஜக-வை ஆதரிப்பதில் மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர்- சிபிஐஎம் ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுகவில் உள்ள மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜக-வை ஆதரிப்பதில் நிலவும் போட்டியில், தமிழக மக்களின் நலனை பாதுகாக்க தவறிவிட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை, டவுன்ஹால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கதிராமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். சம்மந்தப்பட்ட காவல்துறைனர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஜிஎஸ்டி-யினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி கார்பரேட்களுக்கு சாதகமாக அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதாகும். 

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று கோஷ்டிகளுக்கு இடையே பாஜகவை ஆதரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இதில் தமிழக மக்களின் நலனை பாதுகாக்க அதிமுக ஆட்சி தவறிவிட்டது. 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு பாஜக, ஆர்எஸ்எஸ் வெறுப்பு பிரச்சாரமே காரணம். சிபிஎம் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சங்பரிவார் அமைப்புகளே ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். 

மேலும், பொய்யான கருத்துக்களை பரப்பி மத மோதல்களை உருவாக்க சங்பரிவார் அமைப்புகள் முயற்சித்து வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். லோக் ஆயுக்தா மசோதாவை இயற்ற வேண்டும். மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாயை பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...