சௌரிபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது

சௌரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சௌரிபாளையம் பகுதியில் உள்ள கருணாநிதி நகர், தேர்வீதி, கல்லறைவீதி,  ஜி.வி. ரெசிடென்சி என ஒரே பகுதியில் அருகருகே 4 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது குடிக்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அகற்றக்கோரி இன்று கருப்பு கொடிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 24 மணி நேரமும் அக்கடைகளில் மதுவிற்பனை நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்திய போது டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் உத்திரவாதம் அளித்த நிலையிலும், இன்றுவரை டாஸ்மாக் கடைகளை அகற்றவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...