ஈஷா-வுடன் இணைந்து 50 கோடி மரம் நடும் மகாராஸ்டிர வனத்துறை

மகாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் ஈஷா அறக்கட்டளை கடந்த ஜூலை 1ம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மகாராஷ்டிரா நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முகந்திவர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் பலர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டது.



2017இல்  தொடங்கி அடுத்த 3 வருடங்களுக்குள் மகாராஷ்டிரத்தில் 50 கோடி மரங்கள் நட்டு மகாராஷ்டிரத்தின் பசுமை போர்வையை கணிசமாக அதிகரிக்கும் பொருட்டு இவொப்பந்தம் கையழுத்திடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பசுமைப்போர்வை அதிகரிப்பு திட்டத்தின் கீழ் குறிப்பாக கோதாவரி நதி வெள்ளப்பெருக்கு பகுதியில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டு அதிக அளவில் மரங்கள் நடப்படவுள்ளது.



தென்னிந்தியாவில் பசுமைப்போர்வையை அதிகரித்ததில் வெற்றிகரமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஈஷா அறக்கட்டளை இத்திட்டத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப பங்காளியாக இருக்கும். மகாராஷ்டிரா அரசு, ஈஷா அறக்கட்டளையின் ஆலோசனை மற்றும் உள்ளீடு மூலம் 3 வருடங்களில் 50 கோடிமரங்களை (2017இல் 4 கோடி மரங்கள், 2018இல் 13 கோடி மரங்கள் மற்றும் 2019இல் 33 கோடி மரங்கள் என்ற விகிதத்தில்) நட்டு வளர்க்க உள்ளது. மகாராஷ்டிரா வனத்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் திட்டத்தின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் துணையோடு இத்திட்டத்திணை வழிநடத்தும்.

மேலும் ஈஷா அறக்கட்டளை மத்திய பிரதேசத்தில் "நர்மதா நதி புத்துயிரூட்டல்" திட்டத்தின் கீழ் "நமாமி நர்மதே" மற்றும் "நர்மதா சேவா யாத்ரா" போன்றவற்றில் மத்திய பிரதேச அரசுடன் பணியாற்றி வருகிறது.



மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இம்முயற்சியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த மாநாடு விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் "இம்முயற்சியில் மகாராஷ்டிரம் முன்னோடியாக திகழும் "என்றும், "நதிகளை நாம் காக்கவில்லை என்றால் நம்மை யாரும் காப்பாற்ற முடியாது", என்றும் கூறினார்.



சத்குரு கூறுகையில், நாம் நமது நீர் மற்றும் நிலத்தின் நிலை குறித்து போதிய கவனம் கொடுக்கவில்லை என்பதால் தான் இந்த வளங்கள் குறைந்த கொண்டு இருக்கின்றன. நாம் சேதம் ஏற்படுத்தியுள்ளோம் என்றால் நம்மால் அதை சரி செய்யவும் முடியு ம்என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் மாற்றம் உருவாக்கம் பொருளாதாரத்திட்டம் வேண்டும். நாம் சரியான வகை மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் நம் விவசாயிகளின் வருமானத்தை 5 வருடங்களில் 300- 800 சதவிகிதம் அதிகரிக்க முடியும்" என்றார்.

ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் தமிழகத்தில் 30 லட்சம் தன்னார்வத் தொண்டர்களுடன் 3 கோடிக்கும் மேல் மரம் நட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...