கோவை, சிங்காநல்லூர் குளம் அருகே வனமகோத்சவம் சார்பில் இன்று மரம் நடும் விழா நடைபெற்றது. இதில், மருதமரம், பணங்கொன்றை, பச்சை கிழுவை, பொங்கினம் உள்ளிட்ட 50 வகையான 500 மரங்கள் நடப்பட்டன.
ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்தியா முழுக்க நடைபெறும் இந்த வனமகோத்சவம் விழாவில் மியாவாக்கி முறையில் ஆயிரக் கணக்கான மரங்கள் அருகருகே நடப்படும். சுற்றுச்சூழலை பராமரிக்கவும், இயற்கையை பேணிக்காக்கும் வகையிலும் நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையம் மற்றும் மாநகராட்சி இணைந்து (க்யூப் அமைப்பு) இந்த விழா நடத்தப்படுகிறது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், சலீம்அலி பறவைகள் சரணாலயம் இயக்குநர் சங்கர், கோவை வனச்சரகம் கன்சர்வேரா வனஅதிகாரி ஞானசுப்பிரமணியம், வெள்ளலூர் 105 அதிவிரைவுப் படை இணை கமாண்டர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் குளம் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவில் மரங்கள் நடப்பட்டன. இந்த ஆண்டு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் 2000 மரங்கள் நடப்பட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தற்போது 120 வகையான மரங்கள் நடப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களால் ஞாயிறுதோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வனமகோத்சவம் சார்பில் மரம் நடும் விழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜூலை 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை இந்தியா முழுக்க நடைபெறும் இந்த வனமகோத்சவம் விழாவில் மியாவாக்கி முறையில் ஆயிரக் கணக்கான மரங்கள் அருகருகே நடப்படும். சுற்றுச்சூழலை பராமரிக்கவும், இயற்கையை பேணிக்காக்கும் வகையிலும் நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஆய்வு மையம் மற்றும் மாநகராட்சி இணைந்து (க்யூப் அமைப்பு) இந்த விழா நடத்தப்படுகிறது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், சலீம்அலி பறவைகள் சரணாலயம் இயக்குநர் சங்கர், கோவை வனச்சரகம் கன்சர்வேரா வனஅதிகாரி ஞானசுப்பிரமணியம், வெள்ளலூர் 105 அதிவிரைவுப் படை இணை கமாண்டர் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிங்காநல்லூர் குளம் அருகே சுமார் 4 கிலோ மீட்டர் பரப்பளவில் மரங்கள் நடப்பட்டன. இந்த ஆண்டு சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் 2000 மரங்கள் நடப்பட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் தற்போது 120 வகையான மரங்கள் நடப்பட்டு மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களால் ஞாயிறுதோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வனமகோத்சவம் சார்பில் மரம் நடும் விழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.