கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் வரும் 5.7.2017 அன்று காலை 11 மணிக்கு கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டதில் கலந்து கொண்டு தங்களது குறைகளை கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.