சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவியை தாக்கிய பேரூராட்சி முன்னாள் தலைவர் தலைமறைவு

சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம். தமிழக இடைக்கால முதலமைச்சராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினை சேர்ந்த இவர் சூலூர் பேரூராட்சி பணிகளுக்காக சேகரிக்கப்படும் மணல்களை முறைகேடாக எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சூலூர் ஒன்றியத்தின் மகளிர் அணித் தலைவி ராதாமணியின் தூண்டுதளின் பெயரிலேயே அனைத்துக் கட்சிகள் இப்பிரச்சனையில் தலையிடுவதாகக் கூறி சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து ராதாமணியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராதாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

முன்னதாக, சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவி ராதாமணி கடந்த வாரம் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...