சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவியை தாக்கிய பேரூராட்சி முன்னாள் தலைவர் தலைமறைவு

சூலூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம். தமிழக இடைக்கால முதலமைச்சராக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம் அணியினை சேர்ந்த இவர் சூலூர் பேரூராட்சி பணிகளுக்காக சேகரிக்கப்படும் மணல்களை முறைகேடாக எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார். இதனைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் சூலூர் ஒன்றியத்தின் மகளிர் அணித் தலைவி ராதாமணியின் தூண்டுதளின் பெயரிலேயே அனைத்துக் கட்சிகள் இப்பிரச்சனையில் தலையிடுவதாகக் கூறி சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநர் இணைந்து ராதாமணியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராதாமணி காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள சூலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், அவரது மகன் மற்றும் கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

முன்னதாக, சூலூர் ஒன்றிய மகளிர் அணித் தலைவி ராதாமணி கடந்த வாரம் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...