கோவை மாவட்டம், காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அத்திக்கடவு ஆற்றங்கரை ஓரத்தில் இன்று உயிரிழந்த நிலையில் யானை குட்டியின் சடலம் ஒன்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் தற்போது அந்த யானையின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, யானையின் உடல் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இந்த யானை உயிரிழந்ததற்கான உண்மை தகவல் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் தற்போது அந்த யானையின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, யானையின் உடல் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்படும் எனவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகே இந்த யானை உயிரிழந்ததற்கான உண்மை தகவல் தெரியவரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.