ஒவ்வொரு ஓவியத்திலும் ஒரு தகவல்சொல்லும் கோவை வனக் கல்லூரியின் சுற்றுச்சுவர்

கோவை மாவட்டம், தடாகம் சாலையில் அமைந்துள்ளது வனக்கல்லூரி. அன்றாடம் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பயணிக்கும் இந்த சாலையில் வனக்கல்லூரியின் சுற்றுச்சுவர் அசுத்தம் நிறைந்ததாகக் காணப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) ரோட்டரி கிளப் மாணவர்கள் இணைந்து ஜிசிடி கல்லூரி முதல் வனக்கல்லூரி வரையிலான சுற்றுச்சுவற்றில் சமூக விழிப்புணர்வுமிக்க ஓவியங்களை வரைய முன்வந்தனர்.



அதன்படி, இத்திட்டத்திற்கு ரவுண்டு டேபில் 31 அமைப்பின் நிதி உதவியுடன் இக்கல்லூரியின் சுற்றுச்சுவற்றில் ஓவியங்கள் வரையும் பணி துவங்கப்பட்டு தற்போது முடியும் தருவாயினை எட்டியுள்ளது.



இதுகுறித்து ஜிசிடி கல்லூரி மாணவரும், அக்கல்லூரி ரோட்டரி கிளப் தலைவருமாகிய அனக்ஸ் கூறுகையில், பெரும்பாலான மக்கள் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையினை பயன்படுத்த மறுத்து வருகின்றனர். காரணம், அவை மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதே ஆகும். அதுபோன்றுள்ள ஜிசிடி முதல் வனக்கல்லூரி வரையிலான நடைபாதை அருகே உள்ள சுற்றுசுவற்றில் ஓவியங்கள் வரைய திட்டமிட்டோம்.



இதில், நமது கலாச்சாரம், கலை, பெண்கள் முன்னேற்றம், வனவிலங்குகள், இரத்த தானம், மாசுபாடுகள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.



இதனைக்காணும் போது, அவ்வழியாக செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைவர். நடைபாதையும் சுகாதாரமாக இருக்கும். இதற்கான அனைத்து உதவிகளையும் ரவுண்டு டேபில் 31 அமைப்பு வழங்கி வருகிறது.



பொதுமக்களும், இந்த சுவற்றில் ஓவியங்கள் வரைய விரும்பினால் அதற்கான உபகரணங்கள் அனைத்தும் நாங்கள் வழங்குகிறோம். உங்களது ஓவியங்களை வரைந்து சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள முன் வாருங்கள்' என்றார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...