கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேப் போல வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் இன்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் வழித்தடம் அருகே உள்ள தேயிலைத் தோட்ட செடிகளை மூழ்கடித்தபடியே வெள்ள நீர் செல்கிறது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடைவிதித்துள்ளனர்.
மேலும், கன மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வால்பாறை கூழாங்கல் ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டார். அவரை தேடும் முயற்சியில் வால்பாறை வனத்துரையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேப் போல வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் இன்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் வழித்தடம் அருகே உள்ள தேயிலைத் தோட்ட செடிகளை மூழ்கடித்தபடியே வெள்ள நீர் செல்கிறது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடைவிதித்துள்ளனர்.
மேலும், கன மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வால்பாறை கூழாங்கல் ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டார். அவரை தேடும் முயற்சியில் வால்பாறை வனத்துரையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.