வால்பாறையில் கன மழையால் கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பள்ளி மாணவர் மாயம்

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதேப் போல வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் இன்று வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் வழித்தடம் அருகே உள்ள தேயிலைத் தோட்ட செடிகளை மூழ்கடித்தபடியே வெள்ள நீர் செல்கிறது. இதனால் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு தடைவிதித்துள்ளனர்.

மேலும், கன மழை காரணமாக வால்பாறை பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில், வால்பாறை கூழாங்கல் ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லபட்டார். அவரை தேடும் முயற்சியில் வால்பாறை வனத்துரையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...