வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென்கைலாய பக்தி இயக்கம்

தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் "தென்கைலாய பக்தி இயக்கம்" பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.



அதன்படி, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் திட்டத்தை தொடர்ச்சியாக இவ்வாண்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்களும் இயற்கை இரசிகர்களும் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். ஒருபுறத்தில் தனிமனிதருக்கு இந்த பயணம் ஒரு மிகப்பெரிய அனுபவத்தை ஏற்படுத்தினாலும் ஏராளாமான மக்கள் இங்கு வந்து செல்வதால் இந்த இடம் பிளாஸ்டிக் குப்பைகளால் மாசுபடுகிறது. இது இங்குள்ள வன உயிர்களுக்கும் மண் வளத்திற்கும் பாதிப்பாக அமைகிறது.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென்கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை தங்கள் செயல் திட்டத்தில் ஒருமுக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்கைலாய பக்தி இயக்கம் சார்பில் வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணி கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தி வருகிறது. ஜூன் 25 ம் தேதியன்று நடைபெற்ற சுத்திகரிப்பு பணியில் சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், பெங்களூர், ஹைதெராபாத், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், கேஜி கல்லூரி மற்றும் எஸ்என்எஸ் ராஜலட்சுமி கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்கள் மற்றும் பேருரை சேர்ந்த சிவபக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் அடிவார கோவில் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணி மேற்கொண்டனர்.



அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சுத்திகரிப்பு பணியில் சுமார் 400 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது. நான்று ஞாயிற்றுக்கிழமைகள் நடந்த இந்த சுத்திகரிப்பு பணி மூலம் சுமார் 1200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...