அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் டி.எஸ்.பி. வெற்றி உயிரிழந்தார்.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி திருச்சுழி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான வெற்றி நேற்று காரை ஓட்டி வந்தார். அப்போது, பாலவந்தம் என்ற இடத்தில் இவரது கார் வந்துகொண்டிருந்த போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் டிஎஸ்பி வெற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வெற்றியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி திருச்சுழி காவல்துறை துணைக் கண்காணிப்பாளரான வெற்றி நேற்று காரை ஓட்டி வந்தார். அப்போது, பாலவந்தம் என்ற இடத்தில் இவரது கார் வந்துகொண்டிருந்த போது திடீரென கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் டிஎஸ்பி வெற்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வெற்றியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்து திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.