கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீரின்றி அதிகாரிகள் அவதி

கோவை மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் இருந்து புதிய அலுவலகத்திற்கு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பழைய அலுவலகத்திற்கு வெளியே வாடகைக்கு இருந்த அரசு அலுவலகங்கள் தற்போது புதிய கட்டிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மதியம் உணவிற்கு பிறகு கையில் பாத்திரத்தோடு அங்கும் இங்கும் அழைய வேண்டிய சூழ்நிலையே தற்போது நிலவிவருகிறது. குறிப்பாக, கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. 

மேலும், பழைய அலுவலகத்தில் தான் தண்ணீர் இல்லை என்றால் புதிய அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...