பள்ளி மாணவர்கள் தேர்தல் முறையை தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் முறையில் தேர்தல்

வாக்களிக்கும் முறை குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள சுகுணா ரிப் மெட்ரிக் பள்ளியில் மாணவர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் டிஜிட்டல் முறையில் வாக்களித்தனர். 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை இலக்காக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 



இந்த நிலையில், பள்ளி  மாணவ, மாணவியர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 649 மாணவ மாணவிகள், 79 ஆசிரியர்கள், 5 நிர்வாகிகள் உள்ள இப்பள்ளியில் மாணவர் தலைவர், துணை தலைவர், கலை துறை செயலர் மற்றும் விளையாட்டு துறை செயலர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கான தேர்தல் டிஜிட்டல் முறையில் ஐ பேட் மூலம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலின் போது வாக்களிக்கும் முறை பின்பற்றப்பட்டது. 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 18 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது மாணவ மாணவிகளின் கை விரல்களில் மை வைக்கப்பட்டு வாக்காளர் அடையாள சீட்டு சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்வமுடன் வாக்களித்த மாணவ மாணவியர் 18 வயது நிரம்பியவர்களே வாக்களிக்க தகுதியானவர்கள் என்றுள்ள சூழலில் தாங்கள் வாக்களித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...