கோவையில் எட்டு குளங்களை மேம்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் சுமார் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை முதல் கட்டத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, கோவையில் செயல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கோவையில் மட்டும் ஸ்மார்ட் சிட்டியின் தற்போதைய திட்டத்திற்கு ரூபாய் 1,570 கோடி வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வகுப்பது என்பது மிக முக்கியமான பணி, தொலைநோக்கு பார்வையுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு பிறகு கோவை மாநகரம் எப்படி இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்குரிய திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயலாக்கத்திற்கு வருகின்றன.

கோவை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க பல்வேறு புதிய திட்டங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் 8 குளங்களில் ஏரிகளை சுத்தப்படுத்தி புதுப்பித்தல், ஸ்மார்ட் ட்ரீ, ஸ்மார்ட் பள்ளி, திடக்கழிவு மேலாண்மை, மாதிரி சாலை, காற்று மாசுபாட்டு கருவிகள் அமைத்தல், சோலார் மின் விளக்கு வசதி, வ.உ.சி உயிரியல் பூங்கா மேம்படுத்துதல், நகர் கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், வாகனங்கள் நிறுத்தும் வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் முழுவீச்சுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 

ரூ.500 கோடி மதிப்பில் குளங்கள் மேம்பாட்டுத் திட்டம்: கோவையில் உள்ள நரசாம்பதி, செல்வம்பதி, கிருஷ்ணம்பதி, குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் ஆகிய 8 குளங்களில் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. குளங்கள் மேம்படுத்த இந்த குளங்களில் தற்போது கலக்கப்படும் கழிவு நீர்களை குளங்களில் கலக்காமல் தடுத்து, மாற்று வழிகளில் கழிவு நீர்களை விடவும், மேலும் குளங்களில் நீர்களை ஆய்வு செய்தும், குளங்களை தூர்வாரி புரணமைத்து பருவ மழைக் காலங்களில் நீர் தேக்கம் அதிக்கப்படுத்தவும், பூங்கா அமைத்தும், குளங்களில் நீரூற்று அமைத்தும் அழகுபடுத்தப்படும். 

மேலும், மேற்குறிப்பிட்ட 8 குளங்களையும் இணைக்கும் வகையில் சாலை அமைத்து அதில் மிதிவண்டிகள் மூலமாக பொதுமக்கள் பயணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தற்போது சர்வேயர் மூலம் நிலஅளவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு இன்னும் 10 மாதத்திற்கு மேல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளங்கள் மேம்படுத்தப்படுவத்தினால் தற்போது இந்த குளங்களில் அருகில் வசித்து வரும் பொதுமக்களை வெள்ளலூர் பகுதிகளுக்கு மாற்ற மாநகராட்சி சார்பில் குடிசை மாற்று வாரியம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக ரூபாய் 233 கோடி அடுக்குமாடி குடியிருப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...