பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 900-க்கும் மேற்பட்டோர் இன்று ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர்களாக 900-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 65-யை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை பிற பல்கலைக்கழகங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) 957 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக ஊழியர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக பணியாளர்களாக 900-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 65-யை திரும்ப பெற வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களை பிற பல்கலைக்கழகங்களில் பணியில் அமர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (இன்று) 957 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்து தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாரதியார் பல்கலைக் கழக ஊழியர்கள் கூறுகையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம்" என தெரிவித்தனர்.