கொலை வழக்கு சாட்சிகளை வழக்கறிஞர் மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த அம்மாசை (43) என்ற பெண் கடந்த 2013-ம் ஆண்டு வழக்கறிஞர் ராஜவேல் என்பவரது அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அம்மாசை கொலை வழக்கில் முறையான நீதி வேண்டி சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆதிகணேசன் என்பவர் 'அம்மாசை கொலை- நீதிக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பு தொடங்கினார்.



இவ்வழக்கு விசாரணை நேற்று முன் தினம் கோவை விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்றது. அப்போது சாட்சியளிக்க சென்ற ஆதிகணேசனுக்கு வழக்கறிஞர் ராஜவேல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, இது குறித்து ஆதிகணேசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும், அம்மாசை கொலைவழக்கு சாட்சியங்களுக்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் ராஜவேல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிகணேசன் அம்மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...