நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்- ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்



நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும், இந்திய நீதித்துறையில் நான் தான் ஹீரோ எனவும் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தெரவித்தார்.

கோவையை அடுத்த ஈச்சனாரி அருகே மாச்சேகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் செவ்வாயன்று இரவு மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை அழைத்துச் செல்ல கோவை விமான நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து வந்தனர். கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நீதித்துறையில் லஞ்சம் இருக்கனும் என உச்ச நீதி மன்றம் சொல்கிறது. லஞ்சம் கூடாது என நான் சொல்கிறேன். இது தான் தன் மீதான வழக்கு. காவல் துறையினர் சட்டப்படி செயல்படுகின்றனர். அவர்கள் மீது எந்த புகாரும், குறைபாடும் இல்லை. என்னுடைய போராட்டம் தொடரும். நான் குற்றவாளியல்ல. நீதித்துறையில் நான் ஹீரோ. தேசமக்களுக்காகவும் தேச நலனுக்காகவும் நான் போராடுகிறேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 

நீதித்துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தை சேர்ந்த 8 நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து இருக்கிறேன். அவர்களுக்கு 5 ஆண்டு தண்டனை விதித்ததை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.

தாழ்த்தப்பட்ட சமூக நீதபதியான தனது உத்தரவுகள் ஏன் அமல்படுத்தப்படவில்லை. உயர் வகுப்பு நீதிபதிகளின் உத்தரவுகள் மட்டும் அமல்படுத்தப்படுகின்றன. 

நீதித்துறையில் லஞ்சமும், சாதியமும் உள்ளது. நீதித் துறையில் லஞ்சத்தை எதிர்த்து போராடி கைதானதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.

முன்னதாக, பேட்டியின் போது காவல்துறையினர் சிலர் இடையூறு செய்த போது கோபமடைந்த நீதிபதி கர்ணன், நான் தீவிரவாதியல்ல எனவும் காவல் துறையினர் ஒதுங்கி நில்லுங்கள் எனவும் மக்களுக்கு செய்தியை சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து விமானம் மூலம் நீதிபதி கர்ணன் சென்னை அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...