வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘சர்வதேச யோகா தினம்’

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் யோகா மன்றத்தின் சார்பில் ‘சர்வதேச யோகா தினம்’ இன்று பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் முன்னிலை வகித்தார்.



ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி விருது’ பெற்ற 98 வயதான நானம்மாள் அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவி கே.ரோஷினி பெனாசிர் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, மாணாக்கர் முன்னிலையில் யோகா ஆசிரியை நானாம்மாள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். ஓசோன் யோகா மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் ஒவ்வொரு ஆசனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இதில், மாணவ, மாணவியரும் பல்வேறு சந்தேகங்களை விருந்தினரிடம் கேட்டறிந்தனர். சில கடுமையான யோகாசனங்களை தனது 98 வது வயதிலும் மிக சுலபமாக செய்து காட்டியவரை, மாணாக்கரும், ஆசிரியரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் நானம்மாள் முன்னிலையில் மாணாக்கர் தினமும் யோகா செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையையும் மற்றும் சர்வதேச அளவில் தனது மாணவர்கள் 117 தங்கப்பதக்கங்களைப் பெற்ற பெருமையையும், நானம்மாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் பெருமைமிகு தொன்மையான யோகா கலையை பரப்பும் நற்செயலுக்காக, பள்ளியின் சார்பாக நானம்மாள்-க்கு ‘கோவையின் பெருமை’ என்ற விருதை வழங்கி பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் அவர்கள் கௌரவப்படுத்தினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...