வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘சர்வதேச யோகா தினம்’

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் யோகா மன்றத்தின் சார்பில் ‘சர்வதேச யோகா தினம்’ இன்று பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் முன்னிலை வகித்தார்.



ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி விருது’ பெற்ற 98 வயதான நானம்மாள் அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவி கே.ரோஷினி பெனாசிர் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, மாணாக்கர் முன்னிலையில் யோகா ஆசிரியை நானாம்மாள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். ஓசோன் யோகா மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் ஒவ்வொரு ஆசனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இதில், மாணவ, மாணவியரும் பல்வேறு சந்தேகங்களை விருந்தினரிடம் கேட்டறிந்தனர். சில கடுமையான யோகாசனங்களை தனது 98 வது வயதிலும் மிக சுலபமாக செய்து காட்டியவரை, மாணாக்கரும், ஆசிரியரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் நானம்மாள் முன்னிலையில் மாணாக்கர் தினமும் யோகா செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையையும் மற்றும் சர்வதேச அளவில் தனது மாணவர்கள் 117 தங்கப்பதக்கங்களைப் பெற்ற பெருமையையும், நானம்மாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் பெருமைமிகு தொன்மையான யோகா கலையை பரப்பும் நற்செயலுக்காக, பள்ளியின் சார்பாக நானம்மாள்-க்கு ‘கோவையின் பெருமை’ என்ற விருதை வழங்கி பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் அவர்கள் கௌரவப்படுத்தினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...