வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியில் ‘சர்வதேச யோகா தினம்’

வெஸ்டன் காட்ஸ் சர்வதேசப் பள்ளியின் யோகா மன்றத்தின் சார்பில் ‘சர்வதேச யோகா தினம்’ இன்று பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் முன்னிலை வகித்தார்.



ஜனாதிபதியிடம் ‘பெண் சக்தி விருது’ பெற்ற 98 வயதான நானம்மாள் அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பத்தாம் வகுப்பு மாணவி கே.ரோஷினி பெனாசிர் வரவேற்புரை நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, மாணாக்கர் முன்னிலையில் யோகா ஆசிரியை நானாம்மாள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். ஓசோன் யோகா மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் ஒவ்வொரு ஆசனத்தின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

இதில், மாணவ, மாணவியரும் பல்வேறு சந்தேகங்களை விருந்தினரிடம் கேட்டறிந்தனர். சில கடுமையான யோகாசனங்களை தனது 98 வது வயதிலும் மிக சுலபமாக செய்து காட்டியவரை, மாணாக்கரும், ஆசிரியரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் நானம்மாள் முன்னிலையில் மாணாக்கர் தினமும் யோகா செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா ஆசிரியர்களை உருவாக்கிய பெருமையையும் மற்றும் சர்வதேச அளவில் தனது மாணவர்கள் 117 தங்கப்பதக்கங்களைப் பெற்ற பெருமையையும், நானம்மாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் பெருமைமிகு தொன்மையான யோகா கலையை பரப்பும் நற்செயலுக்காக, பள்ளியின் சார்பாக நானம்மாள்-க்கு ‘கோவையின் பெருமை’ என்ற விருதை வழங்கி பள்ளித் தாளாளர் ஹேமலதா சசிக்குமார் அவர்கள் கௌரவப்படுத்தினார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...