கேரள தேயிலை தோட்ட தொழிலாலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி வால்பாறை தோட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

தொழிற்சங்களுடான பேச்சு வார்த்தையில் கேரள மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 313 ரூபாய் வழங்கபட்டு வருகிறது. அனால், வால்பாறையில் உள்ள தனியார் நிறுவன தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 234 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு வருகிறது.



ஒரே நிறுவனத்தில் ஒரே தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு வகையான மாறுபட்ட சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, "கடந்த 2016-ம் ஆண்டு வரை நாங்கள் சார்ந்திருந்த தொழிற்சங்களுக்கு உறுப்பினர் சந்தா செலுத்தி வந்தோம். 2017 ஜனவரி 1 முதல் சந்தா செலுத்தாமல் தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து விலகி விட்டோம்.

தற்போது நாங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத போது தங்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தங்களில் கையொய்பமிட முயன்று வருகின்றனர். தினக்கூலியாக டி.ஏ-வுடன் சேர்த்து 290 ரூபாயை ஏற்று வேலை செய்ய உள்ளதாக பொய்யான அறிவிப்பை வெளியிட உள்ளனர். எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்கள் அல்லாத தங்களை கலந்து ஆலோசிக்காமல் சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டால் அது தங்களை கட்டுப்படுத்தாது. 



எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் எஸ்டேட்டின் தொழிலாளர் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக வழங்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...