கேரள தேயிலை தோட்ட தொழிலாலர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி வால்பாறை தோட்ட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

தொழிற்சங்களுடான பேச்சு வார்த்தையில் கேரள மாநில தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் 313 ரூபாய் வழங்கபட்டு வருகிறது. அனால், வால்பாறையில் உள்ள தனியார் நிறுவன தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 234 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு வருகிறது.



ஒரே நிறுவனத்தில் ஒரே தொழிலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரண்டு வகையான மாறுபட்ட சம்பளம் வழங்குவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வால்பாறையை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, "கடந்த 2016-ம் ஆண்டு வரை நாங்கள் சார்ந்திருந்த தொழிற்சங்களுக்கு உறுப்பினர் சந்தா செலுத்தி வந்தோம். 2017 ஜனவரி 1 முதல் சந்தா செலுத்தாமல் தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து விலகி விட்டோம்.

தற்போது நாங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லாத போது தங்கள் சார்பாக தொழிற்சங்கங்கள் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தங்களில் கையொய்பமிட முயன்று வருகின்றனர். தினக்கூலியாக டி.ஏ-வுடன் சேர்த்து 290 ரூபாயை ஏற்று வேலை செய்ய உள்ளதாக பொய்யான அறிவிப்பை வெளியிட உள்ளனர். எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் உறுப்பினர்கள் அல்லாத தங்களை கலந்து ஆலோசிக்காமல் சம்பள ஒப்பந்தம் செய்யப்பட்டால் அது தங்களை கட்டுப்படுத்தாது. 



எனவே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் எஸ்டேட்டின் தொழிலாளர் பிரதிநிதி, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி கேரளாவில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு இணையாக வழங்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...