கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வறுகின்றன. அதில் அதிக அளவில் மான்களும் உள்ளன.

வறட்சி காரணமாக உணவு தேடி விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.

இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிற்றின் மூலம் மானை கட்டி கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எட்டிமடை வனப்பகுதிக்குள் அதனை விடுவித்தனர்.

வறட்சி காரணமாக உணவு தேடி விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தது.

இதனை பார்த்த தோட்ட உரிமையாளர் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிற்றின் மூலம் மானை கட்டி கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எட்டிமடை வனப்பகுதிக்குள் அதனை விடுவித்தனர்.