குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தி கோவை முதல் பெங்களூருக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மென் பொருள் பொறியாளர்

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் தண்டபாணி லோகநாதன். இவர் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நிறுவணத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து குழந்தைகள் மீதான வன்முறைகள் நடைபெறும் சூழலில் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.



இன்று அதிகாலை 2 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை துவக்கியவர் பவானி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவால பகுதிக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடைகிறார்.



சைக்கிள் பிரியரான இவர் இதே போன்று பல விழிப்புணர்வு நிகழ்விற்க்காக உதகை ஈரோடு சேலம் கேரள மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விரைவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.

இவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...