இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள 390 அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி மேல்நிலைக் கல்வி தேர்ச்சி (10, 12 திட்டம்) ஆகும். விண்ணப்பதாரர்கள் 02.01.1999 மற்றும் 01.01.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
மேலும், கூடுதல் விபரங்களை www.upsc.gov.in மற்றும் www.joinindianarmy.nic.in ஆகிய இணையதளங்களை பார்க்கலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்திய இராணுவ அகடமியில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேர விழையும் கோவை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளின் விபரங்களை கோவை முள்ளாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.