மத்திய அரசு விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் பேட்டி

கோவை அரசு மருத்துவமனையில் விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரூபாவிற்கு கடந்த மார்ச் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த பின்னர், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோவை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் தாய் சேய் நலத்திட்டத்தின் படி மகப்பேறு பெற்ற பெண்ணின் உடனிருந்த செந்திலின் தாயார் சியாமளாவின் கையெழுத்து பெற்ற பின்னரே  கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் யாருக்கும் கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும், கருத்தடை சாதனம் குறித்து விளக்கி கூறி ஒப்புதல் பெற்றே பொருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனை மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...