கோவை அரசு மருத்துவமனையில் விதிகளுக்கு உட்பட்டே கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாகவும், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரூபாவிற்கு கடந்த மார்ச் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த பின்னர், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோவை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் தாய் சேய் நலத்திட்டத்தின் படி மகப்பேறு பெற்ற பெண்ணின் உடனிருந்த செந்திலின் தாயார் சியாமளாவின் கையெழுத்து பெற்ற பின்னரே கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் யாருக்கும் கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும், கருத்தடை சாதனம் குறித்து விளக்கி கூறி ஒப்புதல் பெற்றே பொருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனை மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி ரூபாவிற்கு கடந்த மார்ச் மாதம் கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த பின்னர், கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து கோவை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அசோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் தாய் சேய் நலத்திட்டத்தின் படி மகப்பேறு பெற்ற பெண்ணின் உடனிருந்த செந்திலின் தாயார் சியாமளாவின் கையெழுத்து பெற்ற பின்னரே கருத்தடை சாதனம் பொருத்தப்பட்டதாக தெரிவித்தார். கோவை அரசு மருத்துவமனையில் யாருக்கும் கட்டாய கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதில்லை எனவும், கருத்தடை சாதனம் குறித்து விளக்கி கூறி ஒப்புதல் பெற்றே பொருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மருத்துவமனை மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.