அன்னூர் அருகே புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அருகம்பாளையத்தில் புதிதாக மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அருகம்பாளையம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட உள்ள டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, கடந்த வாரம் மதுபானக்கடை திறக்கபட்டது. இதனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள்அரசு மதுபான கடையை அகற்றகோரி நேற்று முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள் என பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டகாரர்களிடம் அன்னூர் வட்டாச்சியர் இருதயராஜ் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த போது, உடன்பாடு ஏற்படாததால் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் கடை திறக்கபடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி கடிதம் வழங்க கோரி கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலை குன்னத்தூரில் அமர்ந்து சாலை மறியல் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் காரணமாக 20 நிமிடம் கோவை - சத்தி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...