மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்த மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் கொங்கு மண்டல மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், சமத்துவ கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மாடுகளை இறைச்சிக்காக விற்பனை தடைசட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக அரசு ஒரு கண்டன அறிக்கை கூட விடமால் மெளனம் காப்பதாகவும், மத்திய அரசிடம் அடிமையாக தமிழக அரசு மாறி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மாடுகளை விற்பனை செய்ய விதித்த தடையை நீக்கவில்லை எனில், அனைத்து தரப்பு மக்களும் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...