சேலம் ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிக் கழிவறைகள் திறப்பு

மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களின் தலைமையில் ரயில்நிலையங்களை பயணிகளுக்கு மேலும் உதவும் வகையில் மாற்றும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, நாளை (14.06.2017) காலை சுமார் 9.30 மணியளில் சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறையை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால் அவர்கள், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு. விஜுவின் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைக்க உள்ளார்.



சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாகவும், இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளதுடன், நுழைவு வாயில் ஸ்லைடிங் வசதி கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன. 

இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறைகள் சமீபத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டன. மேலும் பல ரயில்நிலையங்களில் இந்த வசதி அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...