மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு அவர்களின் தலைமையில் ரயில்நிலையங்களை பயணிகளுக்கு மேலும் உதவும் வகையில் மாற்றும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, நாளை (14.06.2017) காலை சுமார் 9.30 மணியளில் சேலம் ரயில்நிலையத்தின் 3-4 நடைமேடைகளில் சீர் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறையை சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு சந்திரபால் அவர்கள், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் திரு. விஜுவின் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைக்க உள்ளார்.

சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாகவும், இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளதுடன், நுழைவு வாயில் ஸ்லைடிங் வசதி கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறைகள் சமீபத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டன. மேலும் பல ரயில்நிலையங்களில் இந்த வசதி அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

சேலத்தில் உள்ள 28 ரவுண்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறை மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாகவும், இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளதுடன், நுழைவு வாயில் ஸ்லைடிங் வசதி கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறைகள் சமீபத்தில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டன. மேலும் பல ரயில்நிலையங்களில் இந்த வசதி அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.