மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணல் விலையேற்றம், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணல் தட்டுபாடின்றி கிடைத்தல், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விலையேற்றத்தால் வேலை இழப்பு, நலவாரியத்தில் தேங்கி கிடைக்கும் பணபயன் விண்ணபங்களுக்கு காலதாமதமின்றி உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கூறும்போது, தற்போது மணல் விலை 1 யூனிட்டிற்கு 30,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணலுக்கு மாற்றாக கட்டிடங்களுக்கு உபயோகிக்கப்படும் எம்.சாண்ட் மணலானது மணல் போல் தரமில்லை. மேலும், கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து 80 சதவிகிதம் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, மாநில அரசு இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...