மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணல் விலையேற்றம், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மணல் தட்டுபாடின்றி கிடைத்தல், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விலையேற்றத்தால் வேலை இழப்பு, நலவாரியத்தில் தேங்கி கிடைக்கும் பணபயன் விண்ணபங்களுக்கு காலதாமதமின்றி உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிஐடியு கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கூறும்போது, தற்போது மணல் விலை 1 யூனிட்டிற்கு 30,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணலுக்கு மாற்றாக கட்டிடங்களுக்கு உபயோகிக்கப்படும் எம்.சாண்ட் மணலானது மணல் போல் தரமில்லை. மேலும், கட்டுமான பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து 80 சதவிகிதம் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, மாநில அரசு இப்பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...