கோவை LGB நகர் ஹைவே காலனி பின்புறம் வாலங்குளம் பகுதியில் அகற்றப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. LGB நகர் பகுதில் இருந்த சுமார் 1௦௦௦ குடிசை வாழ் மக்களை வேறு வீடு தருவதாகவும் வாலங்குளம் பகுதியில் சுத்தம் செய்வதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு மக்களை கட்டாயப்படுத்தி அப்புற படுத்தி உள்ளனர். தற்போது, குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயப்படுத்தி அரசால் வெளியற்றிய பின்னர் அந்த இடம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குளத்தினில் கட்டிடகழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் குளத்தினில் நடைபாதை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஆனால், அவர்களில் சுமார் 350 குடிசை வாசிகளுக்கு மாற்று வீடு தரப்படவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்த குடிசை வாசி மக்கள் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து குடிசை மாற்று வாரியம் அலுவரை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.