நகைக்கடைகளில் நகை சீட்டு திட்டங்களை முறைப்படுத்தக் கோரி அகில பாரத இந்து மகா சபா சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்குவதற்காக நகை சீட்டு என்ற சிறு சேமிப்பு திட்டங்கள் நடத்தப்படுகிறது. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு கடைக்கும் செய்கூலி, சேதாரம் வேறுபடுவதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என்றும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவையில் பல நகைக்கடைகள் மற்றும் வடிவமைப்பு தொழிலகங்கள் செயல்பட்டு வருகிறது. பல சிறு சேமிப்பு திட்டங்களை அறிவிக்கும் நகைக்கடைகளில் மக்கள் தங்களால் முடிந்த மாதாந்திர தவணை தொகையை செலுத்தி வருகின்றனர். சூழ்நிலை காரணமாக சில நேரத்தில் தவணை தொகையை செலுத்த முடியாத நிர்பந்தம் ஏற்டுகிறது.

இச்சூழலை பயன்படுத்திக்கொள்ளும் நகைக்கடை உரிமையாளர்கள் பொதுமக்கள் கட்டிய தவணை தொகையினை பல காரணங்கள் கூறி திருப்பி கொடுக்க மறுக்கின்றனர். மேலும், செய்கூலி, சேதாரம் என மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கின்றனர்.

தங்க நகைகள் பல ஆண்டுகளாக மக்களின் பாரம்பரிய காலாச்சார வாழ்வியலோடு சேர்ந்தே வந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக நூதனமான முறையில் மக்களின் பணத்தை சேமிப்பு என்ற முறையில் கொள்ளையடிக்கும் நகைக்கடைகளை கண்காணிக்க ஆய்வுக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நகை விற்பனையை முறைப்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...