தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக தரவரிசைப்பட்டியலில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி, 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை சாய்பாபாகாலணி பகுதியை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர். தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேளாண்மை மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பத்தாகவும் கீர்த்தனா ரவி தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும், அதன் முடிவுகளை பொறுத்து வேளாண்மை படிப்பை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் கோவை சாய்பாபாகாலணி பகுதியை சேர்ந்த கீர்த்தனா ரவி என்ற மாணவி 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பாலாக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தவர். தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேளாண்மை மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பத்தாகவும் கீர்த்தனா ரவி தெரிவித்தார். அதேசமயம் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி இருப்பதாகவும், அதன் முடிவுகளை பொறுத்து வேளாண்மை படிப்பை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.