கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த சோதனை தீவிரம்: உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்காளத்தில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதில் சமைக்கும் உணவு ரப்பர் போன்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து தெலுங்கானா மாநில உணவுப்பொருள் வழங்குதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுவதால், செரிமானக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். மேலும், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று’ உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இருந்த போதும், தமிழக மக்கள் பிளாஸ்டிக் அரிசியால் அச்சம் கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மளிகை கடைகளில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் 485 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக 9444042322 என்ற என்னிக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:- பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக கடந்த 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகிறோம். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி மண்டிகள், மளிகை கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 29 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16 இடங்களில் இருந்து அரசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். கோவையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் அரசிகள் எதுவும் சிக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில் அரசி உற்பத்தி மிக அதிகம், அதனால் இங்கு பிளாஸ்டிக் அரசி வருவதற்கு வாய்ப்பு இல்லை. கோவைக்கு காங்கேயம் போன்ற பல பகுதிகளில் இருந்து அதிகப்படியான அரிசி கிடைக்கிறது. தேவைக்கும் அதிகமான அளவில் இங்கு அரிசி இருப்பதால் கோவையில் பிளாஸ்டிக் அரிசிக்கு இடமில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எங்களுக்கு புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...