கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த சோதனை தீவிரம்: உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்காளத்தில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதில் சமைக்கும் உணவு ரப்பர் போன்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து தெலுங்கானா மாநில உணவுப்பொருள் வழங்குதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுவதால், செரிமானக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். மேலும், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று’ உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இருந்த போதும், தமிழக மக்கள் பிளாஸ்டிக் அரிசியால் அச்சம் கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மளிகை கடைகளில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் 485 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக 9444042322 என்ற என்னிக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:- பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக கடந்த 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகிறோம். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி மண்டிகள், மளிகை கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 29 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16 இடங்களில் இருந்து அரசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். கோவையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் அரசிகள் எதுவும் சிக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில் அரசி உற்பத்தி மிக அதிகம், அதனால் இங்கு பிளாஸ்டிக் அரசி வருவதற்கு வாய்ப்பு இல்லை. கோவைக்கு காங்கேயம் போன்ற பல பகுதிகளில் இருந்து அதிகப்படியான அரிசி கிடைக்கிறது. தேவைக்கும் அதிகமான அளவில் இங்கு அரிசி இருப்பதால் கோவையில் பிளாஸ்டிக் அரிசிக்கு இடமில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எங்களுக்கு புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...