திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவையொட்டி தமிழகம் முழுவதும் திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இடையர்பாளையத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி இராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், அப்பள்ளியில் பயிலும் 1800 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி துவக்கிவைத்தார்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இடையர்பாளையத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி இராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில், அப்பள்ளியில் பயிலும் 1800 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியினை கோவை மாநகர வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முத்துசாமி துவக்கிவைத்தார்.