நீலகிரியில் மதுபானக் கடையினை அகற்றக் கோரி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பழங்குடியினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடந்துரை மூச்சாக்கன்டி பகுதியில் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடையினை திறந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற செய்லாளர் ராஜேந்திர பிரபு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் துயில்மேகம், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...