நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடந்துரை மூச்சாக்கன்டி பகுதியில் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடையினை திறந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற செய்லாளர் ராஜேந்திர பிரபு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் துயில்மேகம், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மக்களின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடையினை திறந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், இன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமை வகித்தார். நீலகிரி நாடாளுமன்ற செய்லாளர் ராஜேந்திர பிரபு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் துயில்மேகம், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.