கோவையில் மின்சாரம் தாக்கி அண்ணன், தங்கை பலி


கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மஜீத் காலனியில் வசித்து வருபவர்கள் சல்மான் (18), பானுமா (16). இருவரும் அண்ணன் தங்கைகள். சல்மான் உக்கடம் மீன் சந்தையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கோவையில் இன்று பகல் 1 மணியளவில் பரவலாக கன மழை பெய்தது. அப்போது, பானுமா வீட்டின் மாடியில் உலரவைக்கப்பட போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சாரக் கம்பியினை பானுமா தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சல்மான், தங்கை பானுமாவை காப்பாற்ற சென்ற நிலையில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அண்ணன், தங்கை இருவரும் பலியாகினர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த உக்கடம் காவல் துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...