கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மஜீத் காலனியில் வசித்து வருபவர்கள் சல்மான் (18), பானுமா (16). இருவரும் அண்ணன் தங்கைகள். சல்மான் உக்கடம் மீன் சந்தையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கோவையில் இன்று பகல் 1 மணியளவில் பரவலாக கன மழை பெய்தது. அப்போது, பானுமா வீட்டின் மாடியில் உலரவைக்கப்பட போடப்பட்டிருந்த துணிகளை எடுத்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின்சாரக் கம்பியினை பானுமா தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, சல்மான், தங்கை பானுமாவை காப்பாற்ற சென்ற நிலையில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அண்ணன், தங்கை இருவரும் பலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் வந்த உக்கடம் காவல் துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.