தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான புல்லட் பயணத்தினை பைக்ரைடர்ஸ் கிளப்பை சார்ந்த மூன்றுபேர் கோவையிலிருந்து துவங்கினர்.

கோவை பைக்ரடைர்ஸ் கிளப்பைச் சார்ந்த கவிசன், கார்த்திக், சந்தீப் ஆகிய மூன்றுபேர் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோவையிலிருந்து புல்லட்டில் கன்னியாகுமரிக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து ஸ்டீபன் அஜய் இவர்களோடு இணைந்து காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், 45 நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அன்றாட வாழ்வில் வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் மேலாண்மை பற்றியும், சேமிப்பு பற்றியும் வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

சுமார், பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின் போது பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், தூண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணத்திற்காக, கல்லூரி மாணவர் மற்றும் தொழிலாதிபர்கள் இணைந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக இப்பயணம் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.

கோவை பைக்ரடைர்ஸ் கிளப்பைச் சார்ந்த கவிசன், கார்த்திக், சந்தீப் ஆகிய மூன்றுபேர் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோவையிலிருந்து புல்லட்டில் கன்னியாகுமரிக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து ஸ்டீபன் அஜய் இவர்களோடு இணைந்து காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், 45 நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அன்றாட வாழ்வில் வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் மேலாண்மை பற்றியும், சேமிப்பு பற்றியும் வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.

சுமார், பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின் போது பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், தூண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயணத்திற்காக, கல்லூரி மாணவர் மற்றும் தொழிலாதிபர்கள் இணைந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக இப்பயணம் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.