தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி- காஷ்மீர் வரை புல்லட் பயணம் கோவையில் துவக்கம்

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான புல்லட் பயணத்தினை பைக்ரைடர்ஸ் கிளப்பை சார்ந்த மூன்றுபேர் கோவையிலிருந்து துவங்கினர்.



கோவை பைக்ரடைர்ஸ் கிளப்பைச் சார்ந்த கவிசன், கார்த்திக், சந்தீப் ஆகிய மூன்றுபேர் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோவையிலிருந்து புல்லட்டில் கன்னியாகுமரிக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து  ஸ்டீபன் அஜய் இவர்களோடு இணைந்து காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 45 நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அன்றாட வாழ்வில் வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் மேலாண்மை பற்றியும், சேமிப்பு பற்றியும் வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.



சுமார், பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின் போது பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், தூண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பயணத்திற்காக, கல்லூரி மாணவர் மற்றும் தொழிலாதிபர்கள் இணைந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக இப்பயணம் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...