மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவையில் கர்நாடகாவிற்கு உதவிய கோவை ஓசை தன்னார்வ அமைப்பினர்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை தன்னார்வ அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களை வேருடன் இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளித்து வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியின் போது இவர்கள் மேற்கொள்ளும் இந்தச் சேவை அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



இந்நிலையில், கர்நாடகாவில் சாலை விரிவாக்கப்பணிக்காக அப்பகுதியில் இருந்த 500 மரங்கள் வெட்ட வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பத்திரிகைசெய்திகள் வாயிலாக ஓசை அமைப்பின் மரங்களுக்கு மறுவாழ்வு குறித்த தகவல் அறிந்த கர்நாடக வனத்துறையினர் ஓசை அமைப்பின் சையது அவர்களை தொடர்புகொண்டு மரத்தினை இடமாற்றம் செய்வது குறித்து உதவிகோரியுள்ளது.



இதுகுறித்து ஓசை சையது நமது சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:- சாலை விரிவாக்கப் பணிக்காக கர்நாடகாவில் ஹூப்லி முதல் ஹசக் வரையிலான சாலையில் இருந்த 500 மரங்களை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய கர்நாடக வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் மஞ்சுநாத், தமிழகத்தில் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினை தொடர்புகொண்டு உதவிகோரினார். இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவிற்கு சென்ற எனது தலைமையிலான ஓசை தன்னார்வ குழுவினர் மரங்களை ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய முடிவுசெய்தோம். அங்கு நமது பாரம்பரிய மண்ணின் மரங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான மாற்று இடங்களையும், மரங்களை வேருடன் அகற்றி எடுத்துச் செல்ல தேவையான அனைத்து வாகன வசதி மற்றும் ஊழியர்களையும் கர்நாடக அரசே வழங்கியது. இதில் வியக்கத்தக்க விசயம் என்னவென்றால், வழக்கமாக மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வேருடன் கூடிய மரத்தின் முக்கியப்பகுதி மட்டுமே இடமாற்றம் செய்யப்படும். ஆனால், கர்நாடக அரசு முழு மரங்களையும் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியது. அதன்படியே, தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.



எங்களுடன் இணைந்து அம்மாநில வனத்துறையினரும் மரங்களை அகற்ற உதவினர். ஒவ்வொரு மரங்கள் வேருடன் இடமாற்றம் செய்யும் போது அம்மாநில அமைச்சர் நேரில் வந்து பணிகள் குறித்து ஆய்வு செய்து ஓசை அமைப்பினர் மற்றும் வனத்துறையினரை ஊக்குவித்தார். மேலும், ஐந்தாவது மரம் இடமாற்றம் செய்யும் போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா நேரில் வந்து பார்வையிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 



மேலும், அங்குள்ள பயிற்சி வனத்துறையினர்களுக்கும் மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வேருடன் இடமாற்றம் செய்வது குறித்தான பயிற்சிகள் ஓசை தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு ஓசை சையது கூறினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...