கோவை மாநகராட்சியில் தடைசெய்யப்பட்ட 1,506 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1,37,250 அபராதமாக வசூல்

கோவை மாநகராட்சியில் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த மே 27 முதல் ஜூன் 2 வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 676 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 1,506 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (மே 2) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியில் கடந்த மே 27ம் தேதி முதல் இன்று மே 2 ஆம் தேதி வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிழக்கு மண்டலம், 37,56,57 மற்றும் 61-வது வார்டுக்குட்பட்ட திருச்சி ரோடு, காமராஜர் ரோடு, மசக்காளிப்பாளையம் ரோடு மற்றும் தண்ணீர்பந்தல் ரோடு ஆகிய பகுதியில் 154 கடைகளில் 62 கிலோவும், மேற்கு மண்டலம், 15, 16, 20, 21, 22, 23 மற்றும் 24-வது வார்டுக்குட்பட்ட சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், மருதமலை ரோடு உள்ளிட்ட பகுதியில் 87 கடைகளில் 105 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம், 28, 31, 38 மற்றும் 39-வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ரோடு, சத்தி ரோடு, காளப்பட்டி ரோடு, வி.கே.ரோடு மற்றும் ஆவாரம்பாளையம் ரோடு பகுதியில் 103 கடைகளில் 124 கிலோவும், தெற்கு மண்டலம், 87, 88, 94, 95, 96, 97, 98, 99 மற்றும் 100-வது வார்டுக்குட்பட்ட போத்தனூர் ரோடு, குனியமுத்தூர் மற்றும் செட்டி வீதி ஆகிய பகுதியில் 140 கடைகளில் 167 கிலோவும், மத்திய மண்டலம், 25, 48, 51, 52, 53, 54, 74, 80, 81, 82, 83 மற்றும் 84-வது வார்டுக்குட்பட்ட ப்ளவர் மார்க்கெட், காளிங்கராயன் வீதி 100 அடி ரோடு, கிராஸ் கட் ரோடு, சுக்குவார்பேட், டவுன்ஹால் மற்றும் உக்கடம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதியில் 192 கடைகளில் 1048 கிலோவும் என மொத்தம் 676 கடைகளில் 1506 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தடையினை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததின் குற்றத்திற்காக பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களிடம் அபராதத் தொகையாக ரூ.1,37,250 விதிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று தெற்கு மண்டலத்தில் 85 வது வார்டு செட்டி தெருவில் பொது மக்களுக்கு இடையூராக சுற்றித்திரிந்த கால்நடைகளை பிடித்து அபராதமாக ரூ.1,000 விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...