ஜனாதிபதி தேர்தலில் பாஜக-விற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக கோவையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டி



கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி கூறிதாவது:-

மாடுகளை சந்தை படுத்துதலில் உள்ள சில விதிமுறைகளில் மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவும், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து நடைபெறும் போராட்டத்தில் தாக்குதல் நடைபெறுவது தவறானது. யாரையும் தாக்க தனிப்பட்ட அதிகாரம் கிடையாது" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இறைச்சி விவகாரம் அடுத்து திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்துள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, "திராவிட நாடு என்று எதுவும் இல்லை. வரலாற்று புத்தகத்தில் தவறாக குறிப்பிட்டு இருக்கும் திராவிட நாடு என்பதை மாற்ற வேண்டும்" என சுப்புரமணிய சாமி வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக இரு அணிகள் இல்லை. பன்னீர் செல்வம் அணி மட்டுமே தனியாக உள்ளார். சட்டப்படியே பழனிசாமி அணி தேர்வு செய்யப்பட்டு ஆட்சி செய்து வருகிறது. 

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. ஜனாதிபதி தேர்தலில் பாஜக-விற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் தனி பெரும்பான்மையுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். மேலும் திமுக தவிர தேச பத்தி உள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தலை சேர்ந்து சந்திப்போம்" என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...