கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை நேற்று நள்ளிரவு முதல் வெள்ளலூர் பகுதியில் நுழைந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகிறது.

இதனிடையே, இந்த காட்டு யானை தாக்கியதில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த யானையை வெளியேற்றும் வரை வெள்ளலூர் பகுதியில் பொதுமக்கள் யாரும் சாலையில் நடமாட வேண்டாம் என்றும், வெளியாட்கள் யாரும் வெள்ளலூர் பகுதியில் நுழைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.