பாஜக-வின் மூன்றாண்டு ஆட்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

கடந்த மூன்று ஆண்டுகால பாஜக ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஓராண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் விரோத திட்டங்கள் எதிர்க்கப்படவில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் இன்று துவங்கி நாளை வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, சவுந்திரராஜன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநிலக் குழு கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டு கால பாஜக அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது. தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மாடுகளை விற்க விதிக்கப்பட்ட தடை என்பது விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை. தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து சட்டம் ஒழுங்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளை மாநில அரசு விமர்சிப்பதில்லை. அதிமுக பிளவை பயன்படுத்தி பாஜக காலூன்ற பார்க்கின்றது.

இந்த மாநிலக் குழு கூட்டத்தில் இந்தி திணிப்பு, வறட்சி, மாட்டிறைச்சி போன்ற பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாற்றுக்கருத்தை மதிக்கும் பண்பு சங்பரிவார் அமைப்புகளுக்கு இல்லை. சென்னை ஐஐடி-யில் தாக்குதலுக்குள்ளான சூரஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றது. தாக்கப்பட்ட சூரஜ் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

மாணவர்கள் கையை முறிக்கும் காவல் துறை, கூலிப்படைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜனநாயக ரீதியாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றது" இவ்வாறு சிபிஐஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...