கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார்

கோவையில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பாதியிலேயே சென்றதால், விவசாயிகள், அதிகாரிகளுடன் காரச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், முடிவு எடுக்க வேண்டிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படுவதில் மெத்தனம் காட்டுவதாக உள்ளது.



மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும்.

கோவையில் தென்னை, வாழை, காய்கறி உள்ளிட்டவை சாகுபடி அதிகளவு இருந்தும் அவற்றிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படாதது காப்பீடு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் உள்ளது. வறட்சி நிவாரணம் வழங்கப்படும் விவசாயிகள் பட்டியலை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட வேண்டும். கணினியில் பட்டா பூமி தொடர்பாக தவறான தகவலை வேண்டுமென்று பதிவேற்றம் செய்யும் அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோவை மாவட்ட விவசாயிகள் சார்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...