கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி

கோவை மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட 46 பேருக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலை சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

கொலை, கொள்ளை போன்ற குற்றசம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சிறைத்துறை சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வழக்குகளுக்கு ஏற்றவாறு 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவி மண்டல நன்னடத்தை அலுவலர் அறிக்கையின் படி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் அடிப்படையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. நிதி உதவி பெருவோர் பட்டியலை வெளியிடுவார்.

அதன்படி, கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறைத்துறை சரக துணை தலைவர் அறிவுடை நம்பி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி உதவி வழங்கும் விழாவில், சிறைவாசிகளால் பாதிக்கப்பட்ட 46 பேரின் 30 வழக்குகளுக்கு ரூ.16 லட்சம் வழங்கப்பட்டது.

பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி உதவி, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைகளுக்கு பயன்படும் நோக்கில் இந்த திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில், சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்டல நன்னடத்தை அலுவலர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...