கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெறும் 25 சதவிகித இடஒதுக்கீடு சேர்க்கை

கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது. 

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.

சொக்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவதை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை, எழிய மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 405 தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 193 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கணேசமூர்த்தி எச்சரித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...