கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.
சொக்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவதை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை, எழிய மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 405 தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 193 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கணேசமூர்த்தி எச்சரித்தார்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.
சொக்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவதை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை, எழிய மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள 405 தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 193 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கணேசமூர்த்தி எச்சரித்தார்.